sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

/

கோவில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

கோவில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

கோவில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு


ADDED : ஆக 18, 2025 09:00 PM

Google News

ADDED : ஆக 18, 2025 09:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

விஷ்ணுபதி புண்யா காலத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு முன் வைக்க வேண்டும்.

இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் வழிபட்டு வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம்.

பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் பங்கேற்று வழிபட்டால் நிலம், வீடு வாங்க தாயாரின் அருள் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மஹா விஷ்ணு புண்ணிய கால பூஜை நேற்று முன்தினம் நடந்தது. காலை, 3:00 மணிக்கு பெருமாளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம ேஹாமம், பஞ்ச சூக்த ேஹாமம், அஷ்டலட்சுமி ேஹாமங்கள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் திரளாக பங்கேற்று, கொடி மரத்தை வணங்கி, பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். அறங்காவலர் குழு தலைவர் மணி, அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை, 4:30 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:40 மணி முதல், இரவு, 7:40 மணி வரையிலும் 27 வெண்மலர்களை கொண்டு கொடிகம்பத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர்.






      Dinamalar
      Follow us