sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முருகபெருமானின் மறு ரூபம் 'வேல்' வழிபட்டால் நன்மை பெருகும்

/

முருகபெருமானின் மறு ரூபம் 'வேல்' வழிபட்டால் நன்மை பெருகும்

முருகபெருமானின் மறு ரூபம் 'வேல்' வழிபட்டால் நன்மை பெருகும்

முருகபெருமானின் மறு ரூபம் 'வேல்' வழிபட்டால் நன்மை பெருகும்


ADDED : செப் 27, 2024 11:13 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: முருகப்பெருமானுக்கு, 108 வேல் வழிபாட்டுப் பெருவிழா, திருவேல் வழிபாட்டு பேரவை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில், பல்லடம் ரோடு, கே.கே.ஜி., மண்டபத்தில் நடந்தது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கவுமாரமடம் சிரவை ஆதீனம் ராமனாந்த குமரகுருபர சுவாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, பாலமுருகனடிமை சுவாமி, முத்துசிவராம சுவாமி அடிகளார், முத்துசிவராமி சுவாமி, ராமனாந்த மகராஜ், அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, 108 சக்திபீடம் காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்படி, 108 வேல்களைக் கொண்டு, கணபதி வேள்வி, மூலவர் அபிேஷகம், திருப்புகழ் பாராயணம், கலச பூஜை, 108 திருவேல் பூஜை உள்ளிட்டவை நடந்தது.

விழாவில், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் பணியை திருவேல் வழிபாட்டுப் பேரவை செய்து வருகிறது. அதன்படி, முருகனின் மறு ரூபமான வேலின் வழிபாட்டு முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லப்படுகிறது.

வீட்டில் 'வேல்' வைத்து வணங்கினால் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கும். சுகப்பிரசவம், குழந்தைபேறு, வம்சவிருத்தி உண்டாகும். செய்யும் தொழிலில் வளர்ச்சி மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில் மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் விலகி நன்மை உண்டாகும். இளைஞர்கள் கல்வியில் மேன்மையும், உயர்வும், வேலைவாய்ப்பும் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us