sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வருக்கு நுாலகர்கள் கோரிக்கை 

/

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வருக்கு நுாலகர்கள் கோரிக்கை 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வருக்கு நுாலகர்கள் கோரிக்கை 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வருக்கு நுாலகர்கள் கோரிக்கை 


ADDED : அக் 16, 2025 05:42 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக நுாலகத்துறையின் கீழ், 1915 ஊர்ப்புற நுாலகங்கள் உள்ளன. இங்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் நுாலகர்கள் பணியாற்றி வருகின்றனர். 14 ஆண்டுகளாக காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமைப்பின் மாநில துணைத்தலைவர் நாகராஜன் கூறியிருப்பதாவது: 2012 முதல் இன்று வரை, 1006 நுாலகர்கள், சிறப்பு காலமுறை ஊதியத்தில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். அரசின் எந்த பலனும் கிடைப்பதில்லை.

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.

இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தால்தான், அரசின் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, பணிக்கொடை, பணியாளர் இறந்தால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கும். தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us