sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி

/

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி


ADDED : ஜன 06, 2025 01:47 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், முக்தி ஸ்தலமாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், வரும் பிப்., 10ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, கோவில் கோபுரங்கள், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில், பணிகள் முடிவடைய உள்ளது.

இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாகசாலை அமைப்பதற்காக கோவிலில் ஈசானிய மூலையில், கடந்த, டிச.,25ம் தேதி, முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதனையடுத்து, கும்பாபிஷேக யாகசாலை மண்டபம் பணி நேற்று துவங்கியது.

100 அடி நீளம், 80 அடி அகலம், 19½ அடி உயரத்தில், யாகசாலை மண்டபம் அமைக்கப்படுகிறது. யாகசாலை மண்டபத்தில், 49 வேதிகையும், 60 குண்டங்களும் அமைக்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us