/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உதவுகிறது மஞ்சள் ஒட்டுப்பொறி
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உதவுகிறது மஞ்சள் ஒட்டுப்பொறி
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உதவுகிறது மஞ்சள் ஒட்டுப்பொறி
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உதவுகிறது மஞ்சள் ஒட்டுப்பொறி
ADDED : ஜன 08, 2026 05:18 AM
கோவில்பாளையம்: சின்னவேடம்பட்டியில் விவசாயிகளுக்கு, தோட்டக்கலை மாணவியர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு தோட்டக்கலை மாணவியர் தங்களது விரிவாக்க கல்வி பயிற்சியின் ஒரு பகுதியாக சின்ன வேடம்பட்டியில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
தென்னை சாகுபடியில் அதிகமாக காணப்படும், ரூகோஸ் ஸ்பைரலிங் வெள்ளை ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் தரப்பட்டது.
வெள்ளை ஈக்களை இயற்கையாக கட்டுப்படுத்தும் கிரைசோ பெர்லா இரை கொல்லியை பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வெள்ளை ஈக்களை ஈர்த்து, ஒட்ட வைப்பதன் மூலம் அவற்றின் பரவலை கட்டுப்படுத்தும் எளிய முறையான மஞ்சள் ஒட்டுப்பொறி குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் தரப்பட்டது.
'உயிரியல் கட்டுப்பாடு, ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தின் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிக்கிறது' என வேளாண் மாணவியர் தெரிவித்தனர்.
சர்க்கார் சாமக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

