sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க யோகா, தியானம் அவசியம்

/

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க யோகா, தியானம் அவசியம்

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க யோகா, தியானம் அவசியம்

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க யோகா, தியானம் அவசியம்


ADDED : செப் 25, 2024 12:38 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் இதன் மையங்களில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:

மாரடைப்பு என்பது இதய பாதிப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படுவதாகும். சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், இருதய பாதிப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., ரத்தத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், டிஎம்டி, எக்கோ ஆகிய பரிசோதனைகள் வாயிலாக, இருதய பாதிப்பை கண்டறியலாம். தேவையான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொண்டு மாரடைப்பை தடுக்கலாம்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக அடைப்பு நீக்கப்படுகிறது.

தினமும் யோகா, தியானம், குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி, புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல், 7 மணி நேர துாக்கம், அன்றாட உணவில் காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக்கொண்டால், இருதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.

கே.எம்.சி.எச்.,ல் சிறப்பு இருதய பரிசோதனை முகாம், செப்., 2ல் துவங்கியது; செப்., 30ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. இதில், சர்க்கரை பரிசோதனை, கொழுப்பு சத்து, ஈ.சி.ஜி., எக்கோ, டிஎம்டி பரிசோதனைகள் ரூ.1,299க்கு மேற்கொள்ளப்படுகிறது; மருத்துவர் ஆலோசனையும் இலவசம். முகாமில் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைக்கு, கட்டணத்தில் சலுகையும் வழங்கப் படுகிறது.

முகாம் நடக்கும் இடங்கள்


அவிநாசி ரோடு, கோவில்பாளையம் மற்றும் ஈரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, கோவை ராம்நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டர், சூலுாரில் உள்ள கே.எம்.சி.எச்., மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us