sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எப்.எஸ்.எஸ்.ஐ.,சான்றிதழ் இருந்தாலும் அக்மார்க் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்

/

எப்.எஸ்.எஸ்.ஐ.,சான்றிதழ் இருந்தாலும் அக்மார்க் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்

எப்.எஸ்.எஸ்.ஐ.,சான்றிதழ் இருந்தாலும் அக்மார்க் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்

எப்.எஸ்.எஸ்.ஐ.,சான்றிதழ் இருந்தாலும் அக்மார்க் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 30, 2025 07:32 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குனர் கட்டுப்பாட்டில், அக்மார்க் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. அக்மார்க் சான்று பெற, குறைந்த அளவிலான விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் மீனாம்பிக்கை கூறியதாவது:

வேளாண் விளைபொருட்கள் மற்றும் தரமான உணவு பொருட்களை தரச்சான்று செய்ய மத்திய, மாநில அரசுகளால், அக்மார்க் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணெய்கள், நெய், மசாலா, தேன், முந்திரி, மஞ்சள், பெருங்காயம் போன்ற 238 பொருட்களுக்கு, அக்மார்க் தரச்சான்று வழங்கப்படுகிறது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு அனைவரும் பெறுவதால், தற்போது அக்மார்க் சான்று பெறுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அக்மார்க் தரச்சான்று உணவு பொருட்களின் கலப்படம், அமிலத்தன்மை, ஈரப்பதம், அயோடின் மதிப்பு, அடர்தன்மை உள்ளிட்ட பல ஆய்வு செய்து வழங்குவதால், வாடிக்கையாளர் மத்தியில் நம்பகத்தன்மை உருவாகிறது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்று பெற்று இருந்தாலும், அக்மார்க் தரச்சான்றுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us