/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்
/
'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்
'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்
'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 12, 2024 09:51 PM
பொள்ளாச்சி:இந்திய ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்,என, கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கு, வரும், 22ம் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
முதல்கட்டமாக, ஆன்லைன் வாயிலாக கம்ப்யூட்டரில் எழுத்துத்தேர்வு, இரண்டாம் கட்டமாக ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்,என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில்ஏற்கனவே இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் தேர்வு நடத்தி, ஆள்சேர்ப்பு செய்வதால், நாட்டின் பாதுகாப்பு பணியில் சேருவதற்கு, இளைஞர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர்.

