/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அன்பு சோலை' மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
/
'அன்பு சோலை' மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 02, 2025 10:20 PM
கோவை; கோவையில் அன்புச்சோலை மையங்கள் அமைக்க, அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அறிக்கை:
பகல்நேர பராமரிப்பு சூழலில், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதற்கு, இரவு நேரம் செயல்படும் அரசு சாரா நிறுவனமாக இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் 50 முதியவர்கள் தங்கும் வகையில், பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வசதிகளை வைத்திருக்கும் வகையில், முறையான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.
கோவையில் அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தகுதியான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை, கலெக்டர் வளாகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு, வரும் 5ம் தேதிக்குள் அனுப்பலாம்.