sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி பெறலாம்

/

அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி பெறலாம்

அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி பெறலாம்

அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி பெறலாம்


ADDED : ஆக 07, 2025 10:03 PM

Google News

ADDED : ஆக 07, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் யோகா, இயற்கை மருத்துவ மறுவாழ்வு மையம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தினந்தோறும் காலையில் நோயாளிகள் மட்டுமின்றி ஆர்வமுள்ள அனைவருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த 11 ஆண்டுகளாக, 24ஏ அறையில் செயல்பட்டு வந்த வாழ்வியல் மையம் தற்போது சற்று இடவசதியுடன் நவீன சமையலகம் அருகே மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் வாழ்வியல் மைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி கூறியதாவது:

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக வாழ்வியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாழ்வியல் மாற்றங்களால் மட்டுமே பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள், மனஅழுத்தங்கள் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்தாலே பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

யோகா முதலில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும், தெளிவான மனநிலையை ஏற்படுத்தும். நல்ல உறக்கம், உணவு, உடற்பயிற்சி, உணர்வு, இந்த நான்கும் இருந்தாலே ஆரோக்கியமாக வாழலாம். இம்மையத்தில், தினமும் காலை, 8:30 முதல் 9:30 மணி வரை யோகா பயிற்சி அளிக்கின்றோம்.

தவிர, நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டும் பெண்கள் அனைவருக்கும் பயிற்சிகள், மனஅழுத்த மேலாண்மை, ஆயில் மசாஜ், உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி, சிகிச்சைகள் அளிக்கின்றோம்.. டீன் ( பொறுப்பு) சிவக்குமார் ஒத்துழைப்பால் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகின்றன.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், சிகிச்சை தேவையுள்ளவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us