sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாட வேண்டும்'

/

'ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாட வேண்டும்'

'ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாட வேண்டும்'

'ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாட வேண்டும்'


ADDED : டிச 31, 2024 06:40 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை ஈஷா கிராமோத்சவ விளையாட்டு திருவிழா, தென் மாநில அளவில் நடந்தது.

ஆண்கள் வாலிபால் பெண்கள் த்ரோபால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிட்டிங் வாலிபால், ஆகிய விளையாட்டுகள் நடந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஐந்தாயிரம் அணிகள், 43,000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதன் இறுதிப்போட்டி, ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி சிலை முன்பு நடந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா விளையாட்டு வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

விழாவில் சத்குரு பேசுகையில், ''300 ஆண்டுகளுக்கு முன் வசித்த மக்கள், ஒவ்வொரு நிகழ்வுகளையும் கொண்டாடினர். பல்வேறு காரணங்களுக்காக அவை குறைந்து விட்டன. அந்த கொண்டாட்டத்தை, புத்துணர்வை, எழுச்சியை கிராமப்புற மக்களுக்கு அளிக்க, கிராமோத்சவ விளையாட்டு திருவிழா, ஆண்டுதோறும்நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்திய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

கிரிக்கெட் வீரர் சேவாக் பேசுகையில், ''அனைவரும், தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த கிராம விளையாட்டு போட்டிகள், ஐ.பி.எல்., போட்டிகளை விட சிறப்பானதாக இருந்தது,'' என்றார்.

முன்னதாக, தென் மாநிலங்களின் பாரம்பரிய கலைகளான பறையாட்டம், தவில் நாதஸ்வரம், புலி நடனம், குசாடி நடனம், செண்ட மேளம், பஞ்சரி மேளம், வள்ள கும்மி, ஒயிலாட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

வெற்றி பெற்ற மாநில அணிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டியில் கோவை அணி முதலிடம்; கிருஷ்ணகிரி இரண்டாம் இடம் பிடித்தன. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் கர்நாடகா பனகல் அணி முதலிடம்; கர்நாடகா பள்ளி பஞ்சாயத்து அணி இரண்டாம் இடம் பிடித்தன. பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் கர்நாடகா மரகோடு அணி முதலிடம்; கோவை பி.ஜி.புதூர் அணி இரண்டாமிடம் பிடித்தன.முதலிடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 5 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டன. 3, 4ம் இடம் பிடித்த அணிகளுக்கு, தலா ரூ. 1 லட்சம் வழக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us