ADDED : மார் 12, 2026 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி: பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சபரி,25. நேற்று முன்தினம் மாலை, வடவள்ளியில் உள்ள தனது நண்பரை காண சென்றார். பெட்ரோல் நிரப்ப சென்றபோது, அங்கிருந்த பிரதீப், அர்ஜூன், சபரீஷன், பரணி ஆகியோர், சபரியை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர்.
பிரதீப் கத்தியால், சபரியின் தலை, தோள்பட்டை, கைவிரலில் குத்தி தப்பினார். சபரி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடவள்ளி போலீசார் அர்ஜூன், சபரீஷன், பரணியை கைது செய்தனர். பிரதீப்பை தேடுகின்றனர்.

