sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்

/

நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்

நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்

நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்


ADDED : ஜூலை 11, 2011 11:11 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சம்பா பட்டத்தில் நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் சம்பா பட்டத்திற்கு கோ 50 நெல் ரகம் ஏற்றதாகும். 130 - 135 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் அதிக மகசூல் தர வல்லது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு அண்ணா 4 என்ற நெல் ரகம் ஏற்றதாகும். இது வறட்சியைத் தாங்கி வளரும்.

இதன் வயது 100 - 105 நாட்கள். களர் உவர் நிலத்திற்கு ஏற்ற திருச்சி 3 என்ற நெல் ரகம் 135 நாட்கள் வயது உடையது. எக்டருக்கு 5,833 கிலோ மகசூல் தர வல்லது. மேற்கண்ட மூன்று நெல் ரகங்களை பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.










      Dinamalar
      Follow us