/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் நன்னடத்தை விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம்
/
தேர்தல் நன்னடத்தை விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் நன்னடத்தை விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் நன்னடத்தை விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம்
ADDED : அக் 06, 2011 01:21 AM
கடலூர் : தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து சேர்மன் மற்றும்
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
தேர்தல் அதிகாரி இளங்கோவன் தலைமைத்
தாங்கினார். கூட்டத்தில் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் தாக்கல் செய்தல்,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துதல், முகவர் நியமித்தல் குறித்து
விளக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி தேர்தல் அதிகாரிகள் ரூபன் சுரேஷ்
பொன்னையா, செல்வகுமார், மாதேஸ்வரன், சந்திரசேகரன் மற்றும் அனைத்து நகராட்சி
வேட்பாளர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் தேர்தல் நன்னடத்தை
விதிமுறைகள் குறித்த வேட்பாளர் கையேடு வழங்கப்பட்டது.

