ADDED : ஜூலை 16, 2011 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்:கார் மோதியதில் நடந்து சென்ற ஒருவர் இறந்தார்.வடலூர் அடுத்த
பூசாலிக்குப்பத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 58.
கும்பகோணம் சாலையில்
நேற்று மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆபத்தாணபுரம் அருகே வந்த
போது, பின்னால் வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். கடலூர்
அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்த
புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.