ADDED : ஜூலை 17, 2011 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : குடிக்க பணம் தர மனைவி மறுத்ததால் விரக்தியடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடலூர், சென்னியப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 45.
இவர் நேற்று முன்தினம் இரவு சாராயம் குடிக்க தனது மனைவி தனலட்சுமியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்ததோடு, கண்டித்துள்ளார். அதில் விரக்தியடைந்த சண்முகம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.