sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

--மாஜி அமைச்சர் சம்பத் தலைமையில் பண்ருட்டி 22வது வார்டில் ஓட்டு சேகரிப்பு

/

--மாஜி அமைச்சர் சம்பத் தலைமையில் பண்ருட்டி 22வது வார்டில் ஓட்டு சேகரிப்பு

--மாஜி அமைச்சர் சம்பத் தலைமையில் பண்ருட்டி 22வது வார்டில் ஓட்டு சேகரிப்பு

--மாஜி அமைச்சர் சம்பத் தலைமையில் பண்ருட்டி 22வது வார்டில் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 16, 2024 05:43 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி நகராட்சி வார்டு 22ல் அ.தி.மு.க., கூட்டணியின் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் முரசு சின்னத்தில் தீவிர ஒட்டு சேகரித்தனர்.

நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., பண்ருட்டி நகர துணை செயலாளரும், கவுன்சிலருமான மோகன் முன்னிலை வகித்தார். பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. மாறாக அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியது.

ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், அம்மா உணவகம், அம்மா கிளினிக் உள்ளிட்டவை நிறுத்தியது.

தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சொத்துவரி, தொழில்வரி, பதிவு வரி என பல மடங்கு வரிகளை தி.மு.க., போட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் அவதியடைகின்றனர். இதற்கு அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.






      Dinamalar
      Follow us