
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது.
கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.