/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு
/
முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு
முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு
முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு
ADDED : ஆக 05, 2024 12:15 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வில் 2,415 மாணவர்கள் பங்கேற்று எழுதினர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவ, மாணவியர்களுக்கு முதல்வரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் பத்து மாதங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், இளங்கலை படிப்பு வரை வழங்கப்படும். இத்தேர்வு கடலுார் மாவட்டத்தில் பத்து மையங்களில் நடந்தது. இதில், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை கணிதம் மற்றும் மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது.
இத்தேர்விற்கு, மாவட்டத்தை சேர்ந்த 2,666 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2415 பேர் தேர்வு எழுதினர். 251 பேர் தேர்வு எழுதவில்லை.