/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 ஆம்னி பஸ்கள் மோதல்; வேப்பூரில் 35 பேர் காயம்
/
3 ஆம்னி பஸ்கள் மோதல்; வேப்பூரில் 35 பேர் காயம்
ADDED : பிப் 27, 2025 09:16 AM
வேப்பூர்; வேப்பூரில் 3 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், 35 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னை, கோயம்பேட்டில் இருந்து (டி.என்91- யூ9616) தனியார் ஆம்னி பஸ் 30 பயணிகளுடன் நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை 2:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூர் மேம்பாலம் அருகே பஸ் சென்றபோது, அவ்வழியே பின்னால் வந்த மற்ற இரண்டு தனியார் ஆம்னி பஸ்கள் (டி.என் 64- டபள்யூ1613), (டி.என்60- பிஎக்ஸ்9788) எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
அதில், 3 ஆம்னி பஸ்சில் பயணித்த தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தை் சேர்ந்த கருப்புசாமி, வேலுார் மாவட்டம் பானு பிரிதர்ஷினி, தேனி மாவட்டம், அய்யனார்புரத்தை சேர்ந்த பாலமுருகன், பங்காமேடுவை சேர்ந்த ஞானராஜ், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த கீர்த்தி மினாளி உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.