sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உண்டியல் காணிக்கை, பைக் திருடிய வழக்கில் 3 பேர் கைது 

/

உண்டியல் காணிக்கை, பைக் திருடிய வழக்கில் 3 பேர் கைது 

உண்டியல் காணிக்கை, பைக் திருடிய வழக்கில் 3 பேர் கைது 

உண்டியல் காணிக்கை, பைக் திருடிய வழக்கில் 3 பேர் கைது 


ADDED : செப் 07, 2024 06:43 AM

Google News

ADDED : செப் 07, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஐயனார் கோவிலில் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் ஐயனார் கோவிலில் கடந்த மே மாதம் 11ம் தேதி இரவு உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடு போனது.

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் சேப்ளாநத்தம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ், 19; அதே பகுதியைச் சேர்ந்த பழனி மகன் குலோத்துங்கன், 20; ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்தனர்.

பைக் திருடிய கைது


பண்ருட்டி அடுத்த விசூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 40; இவர் கடந்த மாதம் 27ம் தேதி பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே கடலுார் சாலையில் நிறுத்தி வைத்திருந்த அவரது ேஹாண்டா ைஷன் பைக் திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் விசாரித்து வந்தனர். அதில், கொட்டிகோணாங்குப்பம் ராஜதுரை, 36; என்பவர் பைக்கை திருடியது தெரியவந்துது. உடன் அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us