sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

3 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

/

3 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

3 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

3 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை


ADDED : பிப் 22, 2025 07:29 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; இரண்டு கல்லுாரி மாணவிகள் உட்பட மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் லாவண்யா,19; கடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ.,மூன்றாமாண்டு மாணவி. கடந்த 13ம் தேதி காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் ஜெயஸ்ரீ,25; புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த இரு சம்பவங்கள் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கோண்டூரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மகள் ஜெயஸ்ரீ,19; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவி. நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us