sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

3,000 புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்க ஆயத்தம்

/

3,000 புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்க ஆயத்தம்

3,000 புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்க ஆயத்தம்

3,000 புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்க ஆயத்தம்


ADDED : செப் 07, 2024 06:57 AM

Google News

ADDED : செப் 07, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் கட்டமாக 3,000 கார்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.

கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என, 10 தாலுகா உள்ளன. மாவட்டம் முழுதும் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன. 7 லட்சத்து 89 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படாமல் உள்ளது.

இதனால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் முதல் கட்டமாக 3,000 புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கும் பணியில் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் உண்மை தன்மை குறித்து அந்தந்த தாலுகாவுக்குட்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் முதல் கட்டமாக 8,000 கார்டுகள் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 3,000 கார்டுகள் பிரிண்டிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகள் ஒரு சில நாட்களில் முடிந்ததும் அந்தந்த தாலுகாவுக்குட்பட்ட வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு ரேஷன் கார்டுதாரர்களிடம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 5,000 கார்டுகள் படிப்படியாக வழங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us