sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியவர் கைது

/

கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியவர் கைது

கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியவர் கைது

கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியவர் கைது


ADDED : ஆக 13, 2024 04:48 AM

Google News

ADDED : ஆக 13, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: டாஸ்மாக்கில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், ஜங்ஷன் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வந்த முதியவர் ஒருவர், ரூ.500 கொடுத்து, ரூ.140 மதிப்புள்ள மதுபானத்தை வாங்கிக் கொண்டு மீதி பணம் ரூ.360 வாங்கிச் சென்றார்.

சற்று நேரம் கழித்து வந்த அந்த முதியவர் மீண்டும் ரூ.500யை கொடுத்து மதுபானம் கேட்டார். சந்தேகமடைந்த விற்பனையாளர் முருகன், நோட்டை ஆய்வு செய்ததில் அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. அவரது தகவலின்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, முதியவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சன்னாசி மகன் இருசன், 67, என்பது தெரிந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருசனை கைது செய்தனர். அவரிடம் 500 ரூபாய் கள்ளநோட்டு எப்படி வந்தது, யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us