இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
UPDATED : நவ 27, 2025 05:23 PM
ADDED : நவ 27, 2025 01:27 PM

இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவையொட்டிய கடல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ., ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியப் பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
31 பேர் பலி
ஏற்கனவே, இலங்கையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மத்திய மலை மாவட்டங்களில் மட்டும் நிலச்சரிவு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. கும்புகனா பகுதியில் பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அங்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் படையினர் பஸ்சில் இருந்த 22 பேரரை பத்திரமாக மீட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர் 14 பேரை காரணவில்லை. அம்பாறை அருகே கால்வாயில் கார் கவிழ்நத விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

