sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் இணை இயக்குனர் ஆய்வு

/

ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் இணை இயக்குனர் ஆய்வு

ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் இணை இயக்குனர் ஆய்வு

ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் இணை இயக்குனர் ஆய்வு

1


ADDED : ஏப் 26, 2024 05:36 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 05:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம் மற்றும் மதலப்பட்டில் வேளாண் துறை சார்பில் 'ஒரு கிராமம்; ஒரு பயிர்' திட்டத்தின் கீழ் நெல் பயிர் செயல் விளக்கம் நடந்தது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, நுண்ணீர் பாசனம் துணை இயக்குனர் செல்வம் தலைமை தாங்கி, ஆய்வு செய்தனர்.

அப்போது இணை இயக்குனர் கூறுகையில், 'ஒவ்வொரு கிராமத்திலும் எந்த பயிர் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறதோ, அந்த பயிரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அருகருகே, பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து குறைந்தது 5 முதல் 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரே பயிரை விதைப்பு செய்து அறுவடை வரை வேளாண் தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்படும்' என்றார்.

இதையடுத்து, துாக்கணாம்பாக்கம் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்துள்ள இடுபொருட்களை ஆய்வு செய்தனர். பின், மண்வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. கோடை மாற்றுப்பயிர் திட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்துள்ள வயலை ஆய்வு செய்தனர்.

அப்போது, வேளாண் உதவி இயக்குவர் சுரேஷ், வேளாண் அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி விதை அலுவலர் விஜயசண்முகம், உதவி வேளாண் அலுவலர் ரஜினிகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us