sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேக்வாண்டோ கலையில் அசத்தும் கிராமத்து மாணவி

/

தேக்வாண்டோ கலையில் அசத்தும் கிராமத்து மாணவி

தேக்வாண்டோ கலையில் அசத்தும் கிராமத்து மாணவி

தேக்வாண்டோ கலையில் அசத்தும் கிராமத்து மாணவி


ADDED : ஆக 08, 2024 12:32 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே கிராமத்தை சேர்ந்த விவசாயி வரதராஜன் மகள் ஜனனி, 18; டிரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், கராத்தே மற்றும் தேக்வாண்டோ கலை பயின்று வருகிறார். திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார்.

இவருக்கு, சிறு வயது முதலே தேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2016ல் விழுப்புரத்தில் நடந்த தேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 2017 ல் திண்டிவனம், 2018 ல் திருப்பூர், 2019 ல் தூத்துக்குடி, 2023 ம் ஆண்டு கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார்.

இவரது இடைவிடாத வெற்றிகளை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசால் ஜப்பான் நாட்டிற்கு 6 நாட்கள் கல்விச்சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சாதனை படைத்து வரும் ஜனனியை மேலும் பல சாதனைகள் படைக்க கராத்தே பயிற்சியாளர் சென்சாய் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ் மற்றும் பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us