sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

/

தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


ADDED : ஜூலை 10, 2024 05:20 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 55; இவர் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியபோது, (தற்போது தற்காலிக பணி நீக்கம்) கடந்த 2017-18ம் ஆண்டில், ரூ. 4.25 லட்சம் கையாடல் செய்ததாக தஞ்சாவூர் விஜிலன்ஸ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஶ்ரீதரன் ஆஜராகததால், கடந்த 19.07.2023ம் தேதி நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.

அதையடுத்து, வரும் 19ம் தேதி ஸ்ரீதரன் கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் சண்முகப்பிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us