ADDED : ஆக 29, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர், 26; இவர், கடந்த 2016ம் ஆண்டு அடி தடிவழக்கில் கைது செய்ப்பட்டார். இந்த வழக்கின் மேல் விசாரணை சிதம்பரம் குற்றவியியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கில், கடந்த இரண்டரை ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகமல் ராமர் தலைமறைவாக இருந்து வந்தார்.
அதையடுத்து, ராமரை கைது செய்ய சிதம்பரம் குற்றவியியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று புவனகிரி பஸ் நிலையம் அருகே நின்றிருந்த ராமரை, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கைது செய்து, சிதம்பரம் குற்றவியியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை 15 நாள் காவிலில் வைக்க, நீதிபதி நிஷா உத்தரவிட்டார்.