/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு முன்னாள் அரசு கொறடா ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு முன்னாள் அரசு கொறடா ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு முன்னாள் அரசு கொறடா ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு முன்னாள் அரசு கொறடா ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 16, 2024 05:49 AM

சிதம்பரம் : சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், குன்னம் தொகுதியில் நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குன்னம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தெரணியில், அரியலுார் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில், வேட்பாளர் சந்திரகாசன் மற்றும் கட்சியினர் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று ஓட்டு கேசரித்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் அருணாச்சலம், ஜெயபால், பெரம்பலுார் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தாமரை ராஜேந்திரன் பேசுகையில், 'மிகவும் எளிமையான வேட்பாளர சந்திரகாசன். உங்கள் குறைகளை கேட்டறிந்து, நிறைவேற்றி தருவார். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். எங்கள் வேட்பாளர் சந்திரகாசனை, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர், பேசினார்.

