நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் பலர் பங்கேறறனர்.
இதில், விவசாயிகள் பெயரில் அம்பிகா சர்க்கரை ஆலை வாங்கிய கடனை புதிய ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரும் பணத்தை, பழைய கடனுக்கு வரவு வைப்பதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். இதை தடுப்பது. வங்கிக் கடனை முழுமையாக ஆலை பெயரில் மாற்றி கரும்பு விவசாயிகளை கடனில் இருந்து விடுவிப்பது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 13ம்தேதி விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

