ADDED : ஜூலை 07, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று பெலாந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அலமேலு, 50; என்பவர் தனது பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து அலமேலுவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த, 11 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
