/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மார் 15, 2025 12:55 AM
கடலுார்;சட்ட எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் சுபத்திரா தேவி செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் சட்ட எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் குறைந்தது 10 ஆண்டுகள் குற்றவியல் வழக்குகளில் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பத்தை கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் https:// cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 28ம் மாலை 5:00 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கடலுார் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.