ADDED : மே 20, 2024 06:42 AM

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி 11 மற்றும்12ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இப்பள்ளியில், பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவிகள், கிருத்திகா, 588, அபிராமி 584, மஹாஹரிணி 583 மதிப்பெண் பெற்றனர்.
தேர்வெழுதிய 214 மாணவர்களில் 213 பேர் தேர்ச்சி பெற்றனர். 550க்கு மேல் 21 பேரும், 500க்கு மேல் 73 பேரும் மதிப்பெண் பெற்றனர்.
அதேபோல் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 240 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி அபிராமி 591, திவ்யதர்ஷினி 587, சபரிராஜன் 585 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களை பிடித்தனர். 550க்கு மேல் 44 பேர், 500க்கு மேல் 137 பேர் மதிப்பெண் பெற்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஆங்கித்துறை பேராசிரியர் அன்பானந்தம் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
துணை முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ்போனிகலா, நர்சரி பள்ளி முதல்வர் பால்மி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

