/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சதுரங்க போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
/
சதுரங்க போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 29, 2024 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், கிங்க் சதுரங்க விளையாட்டு அகாடமி இணைந்து கடலுார் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது.
பள்ளி சதுரங்க விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி தாளாளர் சரவணன், தலைமை ஆசிரியர் ரேணுகா, கிங்க் சதுரங்க அகாடமி செயலர் சீதாபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.