/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பத்திரக்கோட்டை பள்ளியில் இணை இயக்குனர் ஆய்வு
/
பத்திரக்கோட்டை பள்ளியில் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஏப் 18, 2024 11:17 PM
நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வி இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதியதாக ஹைடெக் லேப் உருவாக்கப்பட்டது. இந்த லேப்பை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளி வளாகத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் வைத்து பராமரிப்பதை பார்வையிட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.
ஆய்வில் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் அன்பழகன், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன்,மற்றும் சரவணக்குமார் உடனிருந்தனர்.
பத்திரக்கோட்டை தொடக்க பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையையும் அவர் ஆய்வு செய்தார்.

