ADDED : பிப் 22, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டு, வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் கமலக்கண்ணன், 46. அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், மணிகண்டன் கமலக்கண்ணனின் மகள் நர்மதா, 19, என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த நர்மதா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெண்ணை தாக்கிய மணிகண்டன் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.