ADDED : மே 28, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசாமி கோவில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கியது. தினசரி காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சாமி வீதியுலா நடந்தது.
27ம் தேதி மாலை 5:00 மணிக்கு பருவமழை, உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
இரவு 7:00 மணியளவில் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.