ADDED : செப் 02, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : தொழுதுார் ஜெயப்பிரியா வித்யாலயா கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நோபல் கல்வி மையம் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.
அதில் ஜெயப்பிரியா வித்யாலயா மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
கடலுார் மாவட்டத்திலேயே தொழுதுார் ஜெயப் பிரியா வித்யாலயா கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி சிறந்த பள்ளிக்கான ஐடியல் விருதையும், பள்ளி முதல்வர் பாலா சிறந்த முதல்வருக்கான விருதையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
மாணவர்கள் மற்றும் முதல்வரை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் ஜெயப்பிரியா பள்ளி இயக்குநர் தினேஷ் ஆகியோர் பாராட்டினர்.