ADDED : மார் 03, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்,: ஸ்ரீமுஷ்ணம் மலை மேட்டில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 28ம் தேதி காலை விநாயகர் வழிபாடு நடந்தது. 1ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகனம், அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தனம், முதல் கால யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, சூர்ய பூஜை, கடம் புறப்பாடு நடந்து, காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. டாக்டர் ரவிசுந்தர் சிவாச்சார்யார், ஜெய்சங்கர் குருக்கள் ஆகியோர் கும்பாபிேஷகத்தை நடத்தினர்.