ADDED : செப் 01, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பத்தில், கடலுார் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் தெற்கு மண்டலம் சார்பில், பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் மற்றும் பயிலரங்கம் நடந்தது.
மந்தாரக்குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு மண்டல தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன், கெங்கைகொண்டான் பேரூராட்சி கவுன்சிலர் தங்கமணி, மாவட்ட ஒ.பி.சி., அணி பொதுசெயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் சிறப்பு விருந்திரனாக பங்கேற்று பயிலரங்கத்தை துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.பி., குழந்தைவேலு, மேற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்