/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
ADDED : மார் 03, 2025 07:29 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மாசிமக பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கொடி மரத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
பஞ்சமூர்த்திகள் தினசரி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். 8ம் தேதி விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்வு நடக்கிறது.
11ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 12ம் தேதி மாசி மக உற்சவம், மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, மறுநாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. 14ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் சுவாமி வீதியுலா நடக்கிறது.