/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு கீரப்பாளையத்தில் துணிகரம்
/
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு கீரப்பாளையத்தில் துணிகரம்
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு கீரப்பாளையத்தில் துணிகரம்
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு கீரப்பாளையத்தில் துணிகரம்
ADDED : மே 13, 2024 05:20 AM
புவனகிரி: கீரப்பாளையம் அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி அடுத்த கீரப்பாளையம், திருப்பணிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்,45; அரசு ஊழியர்.
இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார்.
மாலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரொக்கம், 6 சவரன் நகை, பித்தலை பாத்திரங்கள் மற்றும் பட்டு சேலைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
புகாரின் பேரில்புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.