sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டீ கடைக்குள் பாய்ந்த பஸ் டிரைவருக்கு தர்ம அடி

/

டீ கடைக்குள் பாய்ந்த பஸ் டிரைவருக்கு தர்ம அடி

டீ கடைக்குள் பாய்ந்த பஸ் டிரைவருக்கு தர்ம அடி

டீ கடைக்குள் பாய்ந்த பஸ் டிரைவருக்கு தர்ம அடி


ADDED : பிப் 25, 2025 07:10 AM

Google News

ADDED : பிப் 25, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் அசோக், 41; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, புதுக்கோட்டையிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ்சை ஓட்டினார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், திண்டிவனம் - சென்னை சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாரம் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள டீக்கடைக்குள் புகுந்தது. அப்போது, டீக்கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர், மது போதையில் இருந்தது தெரிந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த விபத்தில் டிரைவர் மற்றும் பயணியர் சிலர் லேசான காயமடைந்தனர். டீக்கடை உரிமையாளரான சந்திரன் புகாரில், ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us