/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : மே 20, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே முதியவரைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சூரியன்பேட்டை ஐயனார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரசன், 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது வீட்டின் கழிவுநீர் அரசன் வீட்டு வாசலில் தேங்கியது.
இதை அரசன் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த கார்த்திக், இவரது தாய் கலைவாணி ஆகிய இருவரும் அரசனை தாக்கினர்.
இதுகுறித்து அரசன் அளித்த புகாரின் பேரில், கார்த்திக், கலைவாணி ஆகிய இருவர் மீதும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

