/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாய், மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
/
தாய், மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
தாய், மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
தாய், மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : மே 27, 2024 05:34 AM
குள்ளஞ்சாவடி: தாய் மகனை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை, அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் சதீஷ், 20. கடந்த, 13ம் தேதி, சதீஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விக்ரமன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விக்ரமன் தனது ஆதரவாளர்களுடன் சதீஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். சதீஷ் மற்றும் அவரது தாய், கவிதா, 40, ஆகியோரை, திட்டி, தாக்கினர். காயமடைந்த சதீஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில், ஆனந்த், விக்ரமன், காட்டுப்பாளையம் அஜித், செல்வராஜ் ஆகியோர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

