ADDED : மார் 12, 2025 11:37 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம் : கற்றல் முகாமில் கலந்து கொண்ட ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்கள், பு.முட்லுாரில் உள்ள அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 2024- - 25ம் ஆண்டிற்கான ஒரு நாள் கற்றல் முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்ற ஜே.ஆர்.சி., மாணவர்களை வீனஸ் குழுமப் பள்ளி தாளாளர் வீனஸ் குமார், துணை தாளாளர் ரூபியாள் ராணி பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
பள்ளி முதல்வர் நரேந்திரன் ஜே.ஆர்.சி., ஆலோசகர் ரேணுகா உடனிருந்தனர்.
