sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 5000 ஊக்கத்தொகை கமிஷனர் அனு அறிவிப்பு

/

ரூ. 5000 ஊக்கத்தொகை கமிஷனர் அனு அறிவிப்பு

ரூ. 5000 ஊக்கத்தொகை கமிஷனர் அனு அறிவிப்பு

ரூ. 5000 ஊக்கத்தொகை கமிஷனர் அனு அறிவிப்பு


ADDED : மார் 09, 2025 05:56 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரியை காலகெடுவிற்குள் செலுத்தினால், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, கமிஷனர் அனு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாநகராட்சியில் பிரதான வருவாயாக சொத்துவரி உள்ளது. ஆனால், பொதுமக்களின் வரி செலுத்தும் பங்களிப்பு குறைவாக உள்ளது. அந்தந்த நிதியாண்டில், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்., 1ம் தேதி முதல் செப்., 30 வரையும், 2ம் அரையாண்டிற்கு அக்., 1 முதல் மார்ச் 31 வரை செலுத்த வேண்டும்.

ஒரு அரையாண்டின் 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால், 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மார்ச் இறுதிக்குள் வரி செலுத்தவில்லை எனில், நிலுவை தொகைக்கு மாதம் தோறும் 1 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். சொத்து வரி தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் நிதிக்குழு மானியம் பெறுவதில் உரிய கால இலக்கை எட்ட இயலாமல் உள்ளது.

எனவே, வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை அனைத்து நாட்களிலும் செயல்படும். மார்ச் 9, 16, 23 மற்றும் 30 ஆகிய நாட்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் அனைத்து மண்டலங்களிலும் காலை 9:00 ணி முதல் மாலை 5:00 வரை நடத்தப்படும்.

இன்று (9ம் தேதி) வன்னியர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, தங்கராஜ் நகர் துவக்கப்பள்ளி, ரெட்டிசத்திரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சீமான் தோட்டம் நடுநிலைப்பள்ளிகளில் நடக்கிறது. மேலும் ஜி.பே, போன் பே, ஆகிய இணையதளங்களிலும் செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us