/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுக்கழிவறை கட்டியும் பயனில்லை விரயமாகும் மாநகராட்சி நிதி
/
பொதுக்கழிவறை கட்டியும் பயனில்லை விரயமாகும் மாநகராட்சி நிதி
பொதுக்கழிவறை கட்டியும் பயனில்லை விரயமாகும் மாநகராட்சி நிதி
பொதுக்கழிவறை கட்டியும் பயனில்லை விரயமாகும் மாநகராட்சி நிதி
ADDED : மே 30, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மாநகராட்சி பொதுக்கழிவறை கட்டடம், பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
கடலுார் வண்டிப்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அங்குள்ள மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில் பொதுக்கழிவறை கட்டப்பட்டது. இந்த கழிவறை கட்டடம் தற்போது பொதுமக்கள் பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுக்கழிவறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.