sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சித்ரா பவுர்ணமியால் சில்வர் பீச்சில் கூட்டம்

/

சித்ரா பவுர்ணமியால் சில்வர் பீச்சில் கூட்டம்

சித்ரா பவுர்ணமியால் சில்வர் பீச்சில் கூட்டம்

சித்ரா பவுர்ணமியால் சில்வர் பீச்சில் கூட்டம்


ADDED : ஏப் 24, 2024 02:59 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சித்ரா பவுர்ணமியொட்டி கடலுார் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூடி நிலாச் சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

சித்ரா பவுர்ணமியொட்டி கோவில்கள், கடற்கரைகள், ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் அமர்ந்து சமைத்த உணவை அனைவருக்கும் பரிமாறி உண்ணுவது வழக்கம். அந்த வகையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று கடலுார் சில்வர் பீச்சில் மாலை முதலே பொதுமக்கள் குவிய துவங்கினர். கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தனர். சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை கடலில் குளித்து, கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் கூடியது. பின், அனைவரும் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us